DVAC Raid | ஆட்டத்தை ஆரம்பித்த லஞ்ச ஒழிப்பு துறை - கட்டு கட்டாக சிக்கிய பணம்
எளாவூர் சோதனை சாவடியில் ரெய்டு - 4 லட்சம் பறிமுதல் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூர் தமிழக-ஆந்திர எல்லைப் போக்குவரத்து சோதனைச் சாவடியில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை அதிரடி சோதனை நடத்தினர். வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகளைக் கண்டதும் ஊழியர் ஒருவர் 90 ஆயிரம் ரூபாய் பணத்தைப் புதரில் வீசிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லஞ்சப் பணம் சிக்கியதை அடுத்து, அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
