முதலமைச்சர் பழனிசாமி விவரத்தோடு பேச வேண்டும் - துரைமுருகன்

விவரம் இல்லாமல் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதை விட முதலமைச்சர் விவரத்தோடு, பேச முயல வேண்டும் என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி விவரத்தோடு பேச வேண்டும் - துரைமுருகன்
Published on

விவரம் இல்லாமல் பேசி வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதை விட முதலமைச்சர் விவரத்தோடு, பேச முயல வேண்டும் என, திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. ஆட்சியில் காவேரி - முல்லைப் பெரியார் பிரச்சினையில் என்ன செய்தது என்று கேட்பதையே முதலமைச்சர் பழனிசாமி வழக்கமாக கொண்டிருப்பதாக புகார் கூறியுள்ளார். எனவே, 2019 ஆம் ஆண்டு, இந்திய கணக்காய்வு, தணிக்கை துறை அறிக்கை உள்ளிட்டவற்றை எல்லாம் படித்து விட்டு, தெளிவாக பேசுவது நல்லது என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com