சென்னை ஆயிரம் விளக்கு பகுதி கீரிம்ஸ் சாலையில் உள்ள கேரளா சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகத்தின் கண்ணாடியை ஒரு கும்பல் அடித்து நொறுக்கியது. சபரிமலைக்கு இரண்டு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதல் நடந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.