புயல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவு : ஒரு கிலோ தேங்காய் ரூ.38க்கு விற்பனை

கஜா புயல் பதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து, தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
புயல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவு : ஒரு கிலோ தேங்காய் ரூ.38க்கு விற்பனை
Published on
கஜா புயல் பதிப்பு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைந்து, தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் தற்போது 38 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. தேங்காயின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலை 48 ரூபாய் வரை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதேபோல், மல்லிகை, சாமந்தி உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com