மருத்துவர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி

மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் போராட்டத்தால் மக்கள் அவதி
Published on

மக்களின் நலன் காக்க அரசுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக அரசு சாரா சேவை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பின் செயலாளர் கார்த்திகேயன், தங்கள் அமைப்பில் 2 ஆயிரத்து 300 அரசு மருத்துவர்களும், 3 ஆயிரம் தனியார் மருத்துவர்களும் இருப்பதாக தெரிவித்தார். மழைக் காலமாக உள்ள நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்க முடியாது என கூறிய அவர், அரசுக்கு உதவ தங்கள் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com