Doctor angry issue| விபத்தில் சிக்கிய சிறுவன்.சிகிச்சை அளிக்காமல் விரட்டிய டாக்டர்.அதிர்ச்சி வீடியோ
விபத்தில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பு - வாக்குவாதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, கிளினிக் நடத்தி வரும் அரசு மருத்துவர், விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறி, உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பர்கூர் அடுத்த சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுவன் சிவக்குமார் விபத்தில் காயமடைந்த நிலையில், அங்குள்ள தனியார் கிளினிக் ஒன்றுக்கு பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கிருந்த மருத்துவர் வடிவேல், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
Next Story
