வீடு, அப்பார்ட்மெண்ட், மனைகள் வாங்கும் ஐடியா இருக்கா? கிரெடாய் அமைப்பின் கண்காட்சி

x

கோவை அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா வளாகத்தில், கிரெடாய் அமைப்பின் சார்பில் ஃபேர் ப்ரோ 2025 வீடு வாங்குபவர்களின் கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் பில்டர்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை எஸ்பிஐ வங்கியின் எல்.ஹெச்.ஓ நெட்வொர்க் 3ன் பொது மேலாளர் ஹரிதா பூர்ணிமா தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைப்பின் தலைவர், இந்த கண்காட்சியின் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான வீட்டு மனைகள் வாங்குவது, அப்பார்ட்மெண்டுகள் வாங்குவது குறித்து தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டார். மேலும்,முன்னணி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக அரங்குகள் அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதே போன்று பில்டிங் காண்ராக்டர்களும் ஸ்டால் அமைத்துள்ளதாகவும் தன் உரையில் குறிப்பிட்டார்.இக்கண்காட்சி தொடர்ந்து 3 நாள் நடைபெறும் என்பது குறிப்பிட தக்கது


Next Story

மேலும் செய்திகள்