திண்டுக்கல்லை பரபரப்பாக்கிய கிரில் சிக்கன்.. ஓனருக்கு வந்த போன் கால்.. நடந்தது என்ன?

திண்டுக்கல்லில் உள்ள அசைவ உணவகத்தில்... கிரில் சிக்கன் கெட்டுப்போய் இருந்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர், தற்போது உணவக உரிமையாளரை நூதன முறையில் மிரட்டி பேரம் பேசும் ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் பைபாஸ் சாலையில் பிரபல அசைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அசைவ உணவகத்திற்கு வந்த வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர், பிரியாணி மற்றும் GRILL சிக்கன் ஆர்டர் செய்து பெற்ற நிலையில், தனக்கு வழங்கப்பட்ட கிரில் சிக்கன் கெட்டுப்போயிருப்பதாக கூறி ஹோட்டல் ஊழியர்களிடம் அவர் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com