+2 மாணவர்களுக்காக தினத்தந்தி-SRM நடத்திய கல்வி கண்காட்சி ஐடியா கிடைத்த மகிழ்ச்சியில் மாணவர்கள்

x

சேலத்தில் தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம்.(SRM) கல்வி குழுமம் இணைந்து நடத்திய கல்வி கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து வழிகாட்டும் வகையில், 2 நாள் கல்வி கண்காட்சி சேலத்தில் இன்று தொடங்கியது. தினத்தந்தி மற்றும் எஸ்.ஆர்.எம். கல்வி குழும‌ம் இணைந்து நடத்தும் இந்த கண்காட்சியில், ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டுள்ளனர். கல்வி கண்காட்சியில், மருத்துவம், பொறியியல், கலை-அறிவியல், ஹோட்டல் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு, மேற்படிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்