இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளான நாகை மீனவர்களை, அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கவும், இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.