Digital Scam | நண்பர்களுக்கு பறந்த மெசேஜ் | ஷாக்கான கடலூர் எஸ்.பி | உங்களுக்கும் நடக்கலாம்

ஷாக்கான கடலூர் எஸ்.பி | உங்களுக்கும் நடக்கலாம்

Digital Scam | Cyber Crime | நண்பர்களுக்கு பறந்த மெசேஜ் | ஷாக்கான கடலூர் எஸ்.பி | உங்களுக்கும் நடக்கலாம் #digitalscam #Cuddalore #cybercrime #TNPolice #thanthitv கடலூர் எஸ்.பி பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கி பணம் பறிக்க முயற்சி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பெயரில் போலி முகநூல் கணக்கு துவங்கி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார் ஐ.பி.எஸ். என்ற பெயரில் அவரது புகைப்படத்துடன் முகநூல் கணக்கு துவங்கி, அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு, வேறு ஒரு கணக்கில் இருந்து ராணுவ வீரர் பெயரில் வீட்டுப் பொருட்கள் விற்பனை செய்ய முன்பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார். சந்தேகமடைந்த நபர், நேரடியாக ஜெயக்குமாரை தொடர்பு கொண்டபோது, தமக்கு எந்த சமூக வலைதள கணக்கும் இல்லை என்று தெரிவித்துள்ளார். விசாரணையில், அந்த போலி கணக்கு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபரால் துவங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com