"உன்ன நம்பி கோடிக்கணக்குல கடன் வாங்கிட்டேன் முருகா... சோ.." லார்ட் முருகனையே மிரள வைத்த லெட்டர்...

x

தர்மபுரியில் கடன் பிரச்சனையை தீர்க்க கோரி கடிதம் ஒன்றை எழுதிய பக்தர், அதனை கோயில் உண்டியலில் போட்டுள்ளார். குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஒரு நபர், தான் யாருக்கெல்லாம் கடன் கொடுக்க வேண்டுமென எழுதி, தன்னுடைய கடன் பிரச்சனையை முருகன் தீர்க்க வேண்டி கடிதம் ஒன்றை எழுதி இருந்தது தெரிய வந்துள்ளது. அக்கடிதத்தை எழுதிய நபர், தன்னுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடாமல் கடிதத்தை உண்டியலில் போட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்