Thiruchendur | படையெடுத்த பக்தர்கள்... இது திருப்பதியா? திருச்செந்தூரா!
படையெடுத்த பக்தர்கள்...
#Thiruchendur | #temple படையெடுத்த பக்தர்கள்... இது திருப்பதியா? திருச்செந்தூரா! மாசி திருவிழா மற்றும் முகூர்த்த நாளை ஒட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். ஞாயிறு விடுமுறையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பொதுத் தரிசனம் மற்றும் கட்டண வரிசைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு 25க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் கோவில் வளாகத்தில் விழாக்கோலம் பூண்டது..
