Srirangam| Purattasi| புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கத்தில் குவியும் பக்தர்கள்
புரட்டாசி முதல் சனிக்கிழமை.. ஸ்ரீரங்கத்தில் குவியும் பக்தர்கள்
#srirangam #purattasi #thanthitv
புரட்டாசி முதல் சனிக்கிழமை ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாள், சக்கரத்தாழ்வார், கிருஷ்ணர் மற்றும் தாயார் சன்னதிகளில் வழிபட்டனர் எள் மற்றும் நெய் விளக்கேற்றியும், அணையா விளக்கில் நெய் ஊற்றியும் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். வயதான பக்தர்களின் வசதிக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் மற்றும் வெண்பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
