அரசு வேலை ஆசை...! ரூட்டு விட்ட பெண்... பறிபோன பல லட்சம்.. கொத்தாக தூக்கிய போலீஸ்

x

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி, 18 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

குரோம்பேட்டை, நாகல்கேணி பகுதியை சேர்ந்த மலர் என்பவர்,

ஷூ கம்பெனியில் பணிபுரிந்தபோது குணசுந்தரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. தனது மகள் சுகன்யா, அரசியல் பிரமுகர்களிடம் செல்வாக்காக உள்ளதாகவும், எனவே பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை நம்பி 5 லட்சம் ரூபாயை மலர் கொடுத்துள்ளார். வெகு நாட்களாகியும் வேலை கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மலர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சுகன்யாவை கைது செய்தனர். அவர், இதுபோல் பலரிடம் 18 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்