Derail | Train Accident | ரயிலில் 13 பெட்டிகள் தடம்புரண்டு பயங்கர விபத்து
உ.பி.யில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ஆக்ரா - டெல்லி இடையிலான ரயில் பாதையில், இரவில் சரக்கு ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இதனால் ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு ரயில்வே ஊழியர்கள் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
Next Story
