Palani | Air Pollution | கடும் புகைமூட்டம் | காரணங்களை அடுக்கும் பழனி மக்கள்
Palani | Air Pollution | கடும் புகைமூட்டம் | காரணங்களை அடுக்கும் பழனி மக்கள் #Palani #AirPollution #Garbage #thanthitv பழனி - நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து - புகைமூட்டம் பழனி நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்களால் வைக்கப்படும் தீயால் அப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டமாகக் காணப்படுகிறது. பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் இருந்தும், குப்பைகள் தரம் பிரிக்கப்படாததே இந்தத் தீ விபத்துகளுக்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அப்பகுதி குடியிருப்பாளர்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்குக் கண் எரிச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் இயந்திரங்களை இயக்கி குப்பைகளைத் தரம் பிரிக்கவும், தீ வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
