பகல் நேரத்தில் ஊருக்குள் உலா வரும் அபாயம்.. பீதியில் மக்கள்
நீலகிரி மாவட்டம் உதகையை சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புப்பகுதிக்குள் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உதகை அருகே தேவர்சோலை கிராமத்தில் பகல் நேரத்தில் கரடி ஊருக்குள் உலா வந்ததை கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் இருந்து நடைபாதையில் ஒய்யாரமாக நடந்து வந்த கரடி, மக்கள் நடமாட்டத்தை பார்த்து மீண்டும் வந்த வழியே சென்றுள்ளது. மேலும் விநாயகர் கோவில் பகுதிக்கு உணவு தேடி வந்த கரடியின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் கரடியைப் பிடித்து வனப்பகுதிக்குள் விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
