சிறுவாணி குறுக்கே கேரளா புதிய தடுப்பணை : 3 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

சிறுவாணி குறுக்கே கேரள அரசு புதிதாக கட்டி வரும் தடுப்பணையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோவை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுவாணி குறுக்கே கேரளா புதிய தடுப்பணை : 3 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி
Published on
அட்டப்பாடியில் பாய்ந்தோடும் சிறுவாணி நதியின் குறுக்கே கேரள அரசு புதிதாக தடுப்பணை அமைத்து வருகிறது. தனியார் மினரல் வாட்டர் ஆலைக்கு அங்கிருந்து 20 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதனால் அட்டப்பாடி விவசாயிகள், ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அங்கு தடுப்பணை அமைக்கப்பட்டால், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்படும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தடுப்பணை அமைக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com