Cuddalore | Turtle | கடலோரம் திரியும் அரிய வகை ஆமை.."மார்ச் 31ம் தேதி வரை.." -கலெக்டர் எடுத்த முடிவு

கடலோரம் திரியும் அரிய வகை ஆமை..

அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்கும் விதமாக கடலூரில், சில்வர் பீச் முதல் அக்கரைக்கோரி கடற்கரை வரை 3 கிலோ மீட்டர் தூரம் ஆமை நடை என்ற விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்து, பொதுமக்களுடன் சேர்ந்து நடந்து சென்றார். இதில் கடல் ஆமை முட்டையிட்டு கடலுக்குள் சென்றதை வனத்துறையினர், தன்னார்வலர்கள் பார்வையிட்டு, கடல் ஆமை குறித்தும், அதன் முட்டைகளை பாதுகாப்பது குறித்தும் விளக்கினர். இந்த விளக்கம் பயன் உள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து 550 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 31ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com