Cuddalore | திடீரென குவிந்த ஏராளமான மக்கள்.. நேரிலேயே சென்று கலெக்டர் போட்ட உத்தரவு
Cuddalore | திடீரென குவிந்த ஏராளமான மக்கள்.. நேரிலேயே சென்று கலெக்டர் போட்ட உத்தரவு
குறைதீர்க்கும் கூட்டத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், கடந்த வார மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளையும் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அனைத்து துறை உயர் அதிகாரிகளும் நேரில் பங்கேற்ற இந்த கூட்டம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
