கடலூரில் கனமழை : சாலையில் கரை புரண்டு ஓடிய மழைநீர்

கனமழை காரணமாக கடலூரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.
கடலூரில் கனமழை : சாலையில் கரை புரண்டு ஓடிய மழைநீர்
Published on

கனமழை காரணமாக கடலூரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், அங்குள்ள சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடலூர் துரைசாமி நகர், பாரதி நகர், வில்வ நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்த‌து.

X

Thanthi TV
www.thanthitv.com