Cuddalore Fire Accident | திடீரென தீ பிடித்து கருகிய போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்
Cuddalore Fire Accident | திடீரென தீ பிடித்து கருகிய போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்ட வாகனங்கள்
காவல் நிலையத்தில் நின்ற வாகனங்களில் திடீர் தீ - பரபரப்பு கடலூர் மாவட்டம், வேப்பூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த விபத்துக்குள்ளான வாகனங்கள் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்கு தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வேப்பூர் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மதியம் தீடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சம்பவிடத்திற்கு விரைந்து வந்த வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் 4 வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்த நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
