சுருக்குவலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - மீனவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தாலோ, 240 குதிரை திறனுக்கு அதிகமான திறன்கொண்ட இயந்திரங்கள் பொருத்திய விசைப்படகுகளை பயன்படுத்தினாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுருக்குவலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - மீனவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Published on
மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தாலோ, 240 குதிரை திறனுக்கு அதிகமான திறன்கொண்ட இயந்திரங்கள் பொருத்திய விசைப்படகுகளை பயன்படுத்தினாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட படகு மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படுவதோடு, மீன்வளத்துறை மூலமாக மீனவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com