Cuddalore | Canal | "பிளாஸ்டிக் குப்பை இல்லனா இப்படி ஒரு மாற்றமா.." | அடியோடு மாறிய கடலூர் கால்வாய்
750 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்..புதுப்பொலிவு பெற்ற கால்வாய் கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சதுப்புநிலப் பகுதியில் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள உப்பனாறு கால்வாயில் இருந்து 750 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த பிச்சாவரம் பகுதியில் பேக்வாட்டர் எனப்படும் உப்பணாறு தண்ணீர் ஓடும் கால்வாய்கள் ஏராளமாக அமைந்துள்ளன. இதில் ஒரு கால்வாய் பிளாஸ்டி குப்பைகளால் நிரம்பியிருந்தது. இந்நிலையில் காலநிலை மீட்சி கிராம திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் மற்றும் வனத்துறையினரின் முயற்சியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இருந்த 750 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டு, கரையை வலுப்படுத்தி, கால்வாய்க்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.. மேலும் 600 சமூக ஆர்வலர்கள் பங்களிப்புடன் கரைகளில் 3ஆயிரம் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடப்பட்டு இந்த கால்வாய் ரம்மியமாக காட்சியளிக்கிறது.. இது குறித்த வீடியோ காட்சிகள் வனத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.
