Cuddalore Accident | ஹைவேஸில் துடிதுடித்து பிரிந்த 3 கல்லூரி மாணவர்கள் உயிர்.. மேலும் 3 பேர் சீரியஸ்

கடலூர் மாவட்டம் அருகே கல்லூரி மாணவர்கள் சென்ற கார் சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 3பேர் சம்பவிடத்திலேயே பலியாகினர்..3பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்... திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி அருகே உள்ள ஒரு தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் தொழுதூர் மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துள்ளனர்.... கார் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு கட்டை மீது ஏறி எதிர்திசையில் வந்த வேப்பூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த 3 மாணவர்கள் இடத்திலேயே பலியானார்கள்... மேலும் அதில் பயணம் செய்த மேலும் 3 இளைஞர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவத்தை வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்....

X

Thanthi TV
www.thanthitv.com