மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவு...நண்பனை வெட்டி கொன்ற கணவன்...கிணற்றில் கிடந்த ஓட்டுனரின் சடலம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேது என்கிற பெருமாள். கடந்த 15-ஆம் தேதி சேதுவை சிலர் வீட்டில் இருந்து அழைத்துச் சென்ற நிலையில், அவர் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி போலீசாரிடம் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், காணாமல் போன சேதுவின் நண்பரான முரளி என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, முரளியின் மனைவியும், சேதுவும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், அதனை கைவிட வேண்டுமென முரளி பலமுறை அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது. எனினும், சேது மற்றும் முரளியின் மனைவி தங்கள் உறவை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முரளி தனது நண்பர்களான நவீன், தங்கராஜ் மற்றும் இரண்டு பேருடன் சேர்ந்து சேதுவை கொலை செய்து, ஏ.நாகமங்கலம் என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் புதைத்தனர். இதைத் தொடர்ந்து முரளி, நவீன், தங்கராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்