Crime | சுமார் ஒரு கோடி மதிப்பு - சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரில் ஒளித்து வைப்பு
Crime | சுமார் ஒரு கோடி மதிப்பு - சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரில் ஒளித்து வைப்பு
சென்னை துறைமுகத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் தாம்பரம் காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில், சென்னை துறைமுகத்தில் இருந்து தைவானுக்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்பிலான 9 கிலோ மெத்தாகுவலோன் போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக 110 கிராம் போதைப்பொருளுடன் பிடிபட்ட ஆனந்தபிரபு, அருண் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் திட்டம் தெரியவந்தது. இதையடுத்து துறைமுகத்தில் கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்து, கைதான இருவரையும் சிறையில் அடைத்த போலீசார், போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
