தீவுத்திடலில் நவ.6 முதல் பட்டாசு விற்பனை - பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளுக்கு அனுமதி

சென்னை தீவுத்திடலில் நவம்பர் 6ஆம் தேதி முதல் பட்டாசு விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவுத்திடலில் நவ.6 முதல் பட்டாசு விற்பனை - பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளுக்கு அனுமதி
Published on

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடைகளுக்கு அனுமதி வழங்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். வழக்கமாக 80 கடைகள் இயங்கும் நிலையில் இந்த ஆண்டு 30 முதல் 40 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. கடைகளுக்கான டெண்டர் வரும் ஒன்றாம் தேதி இறுதி செய்யப்பட்டு 6 மீட்டர் இடைவெளியில் கடைகள் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com