சிறையில் இருந்து தப்பித்த கைதிக்கு ஆண்டவன் போட்ட கட்டு.. கோவையில் பரபரப்பு

x

கோவை சிறையில் இருந்து தப்பிய கைதியை போலீசார் சுற்றி வளைத்த பிடித்த நிலையில், கால் உடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த விஜயரத்தினம் என்பவர், போக்சோ வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், தப்பி சென்று தலைமறைவானார். இதனையடுத்து அவரை தேடி வந்த போலீசார், அவரது வீட்டில் வைத்து அவரை பிடித்தனர். அப்போது தப்பி செல்ல முயன்ற விஜய் ரத்தினம் பாறையில் குதித்ததால், அவரது கால் முறிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்