முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் மனு தாக்கல் - இன்று விசாரணை

முன்ஜாமின் கோரி இயக்குனர் பா. ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் மனு தாக்கல் - இன்று விசாரணை
Published on
ராஜராஜ சோழ மன்னன் பற்றி சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் முன்ஜாமின் கோரி இயக்குனர் பா. ரஞ்சித் தாக்கல் செய்துள்ள மனு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி இயக்குனர் ரஞ்சித் தாக்கல் செய்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com