தமிழகத்தை அதிர வைத்த வழக்கு... "ஏஎஸ்பி உள்பட..." - கோர்ட் அதிரடி உத்தரவு

x

நெல்லையில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஏ.எஸ்.பி பல்வீர்சிங் உட்பட 14 காவலர்களும் வருகிற 28ம் தேதி மீண்டும் ஆஜராக நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகள் நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் உள்ளிட்டோருக்கு கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நான்காவது முறையாக இந்த வழக்கானது, நெல்லை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வீர் சிங் உட்பட 12 காவல்துறை அலுவலர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகிய இருவர் ஆஜராகவில்லை. விசாரணைக்குப் பிறகு வருகிற 28ம் தேதி வழக்கில் தொடர்புடைய 14 பேரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்