சேலத்தில் பாரம்பரிய இனங்கள் ஆராய்ச்சி மையம் சார்பில் நாட்டு மாடுகள் கண்காட்சி நடத்தப்பட்டது. அதில் காங்கேயம், உம்பளச்சேரி, பர்கூர், புளிகுளம், ஆலம்பாடி, மலைமாடு ஆகிய இனங்களை சேர்ந்த மாடுகள் இடம்பெற்றிருந்தன. நாட்டு இன மாடுகளை விவசாயிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் பார்வையிட்டனர். நாட்டு பசுமாடுகளை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.