கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு
Published on

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. 25 படுக்கை வசதிகள் கொண்ட இந்த வார்டில், 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது வரை கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com