

எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் ஆகியவற்றுக்கு இடையே, மருத்துவம் மற்றும் நலவாழ்வு தொடர்பான இந்திய மருத்துவத்தில் ஆராய்ச்சிகளை இணைந்து நடத்துவதற்கும், தங்களிடம் உள்ள பரிசோதனை கூடம் மற்றும் பிற வசதிகளை, அந்தந்த துறைகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணைவேந்தர் சுதா சேஷய்யன் முன்னிலையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் கணேஷ், எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அஸ்வத் நாராயணன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.