முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் வழங்கியோர் பட்டியல்
* இதன்படி அரசுப் போக்குவரத்து கழகங்களின் பணியாளர்கள் சார்பாக, 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அடாஸ் சின்டெல் பிராய்ஸ் கூட்டமைப்பு மற்றும் ஹுண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்கள் தலா 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளன.
* சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் 3 கோடி ரூபாயும், ஐஓபி வங்கிப்பணியாளர்கள் மற்றும் டியூப் இன்வஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்கள் சார்பாக தலா 2 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளன.
* அதிமுக சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி, காமராஜர் துறைமுகம் சார்பிலும் தலா 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*நடிகர் அஜித் குமார் , மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் தலா 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
* நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தலா 25 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர்.
* இதுவரை மொத்தம் 134 கோடியே 88 லட்சத்து 92 ஆயிரத்து 940 ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாகவும், நிவாரணம் அளித்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
* இதனிடையே டாடா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு 8 கோடி ரூபாய் மதிப்பிலான, 40 ஆயிரத்து 32 பிசிஆர் கொரோனா சோதனைக் கருவிகள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
