அமெரிக்காவில் இருந்து திரும்பிய இளைஞருக்கு உடல்நல குறைவு - திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நாகை இளைஞர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய இளைஞருக்கு உடல்நல குறைவு - திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
Published on

அமெரிக்காவில் இருந்து திரும்பிய நாகை இளைஞர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக, திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிக்கலை அடுத்த மஞ்சகொல்லையை சேர்ந்த அந்த இளைஞர், சில வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, நாகை அரசு மருத்துவமனையை அணுகி உள்ளார். மருத்துவ பரிசோதனையில், கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com