கொரோனாவை போல உலகம் முழுவதும் புது அபாயம்.. எமர்ஜென்சி மணியை அடித்த `WHO’

காங்கோ நாட்டில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள குரங்கம்மை வைரஸ், ஆப்பிரிக்காவை கடந்து பரவக்கூடிய ஆற்றல் படைத்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குரங்கம்மை வைரஸை சர்வதேச சுகாதார அவசரகால நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 13 நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com