தமிழகத்தில் இன்று 4,804 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 388 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 6 ஆயிரத்து 553 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 40 ஆயிரத்து 954 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
