

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் மற்றும் சில்லரை மொத்த வியாபாரிகளுக்கு இலவசமாக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மூடப்படும் என்ற வதந்தி பரவி வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே காய்கறிகளின் வரத்து குறைந்ததால், விலை சற்று உயர்ந்துள்ளது.