கத்திப்பாரா மேம்பாலத்தில் அடுத்தடுத்து விழுந்த 3 பேர் - பரபரப்பான சாலை

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் ஆயில் கொட்டியதில் வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள், சாலையில் மர கிளைகளை வைத்து பிற வாகன ஓட்டிகளை எச்சரித்தனர். கிண்டி நோக்கி செல்லும் சாலையில், அவ்வழியே சென்ற ஒரு வாகனத்தின் ஆயில் கசிந்து கொட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் 3 பேர், அதில் வழுக்கி கீழே விழுந்து காயமடைந்தனர். தொடர்ந்து மணலை கொட்டிய அவர்கள், மர கிளைகளை வைத்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com