Conductor Arrest In POCSO || மாணவிகளிடம் அத்துமீறல் - போக்சோவில் நடத்துனர் கைது
சேலம் எடப்பாடி அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நடத்துனர், கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி சக மாணவிகளுடன் பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது நடத்துனராக இருந்த சின்னசாமி, மாணவிகளிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடத்துனர் சின்னசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
Next Story
