

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையே அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் பஞ்சாப் சங்கம் சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவுத் தொகையை மட்டுமே கணக்கிட்டு, குறைந்த கட்டணத்தை அரசு வழங்குவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.