பட்டாக்கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்.. வைரலாகும் திடுக்கிடும் வீடியோ..
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் பொங்கல் விழாவை கல்லூரி மாணவர்கள் ஆடல் பாடல் கொண்டாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பிரசிடென்சி கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் கடற்கரை சாலை மேளதாளங்கள் அடித்து உற்சாகமாக நடனமாடி உள்ளனர். அதில் இளைஞர் ஒருவர் கையில் பட்டாகத்தியை எடுத்து சுழற்றியவாறி நடனம் ஆடிக்கொண்டே சிலரை பார்த்து முறைத்தபடி செல்கிறார். அந்த நிலையில் சக மாணவர்கள் அவரிடம் இருந்து கத்தியை பிடுங்கி விடுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில்
வெளியாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது
Next Story
