ராயப்பேட்டை அருகே கடைக்கு தாயுடன் நடந்து சென்ற கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல்
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையை சேர்ந்த 19 வயதுடைய பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.. நேற்று முன்தினம் (4/6/25) இரவு மாணவி வீட்டருகே உள்ள பேன்சி ஸ்டோரில் பொருட்கள் வாங்க வேண்டி தனது தாயுடன் நடந்து சென்றுள்ளார்.. அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாய் கண்முன்னே மாணவியின் இடுப்பில் கில்லி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.. உடனே தாய் சத்தம் போடவே இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்..
பின்னர் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி இது குறித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற நபர்களை தேடிவருகின்றனர்..
Next Story
