வேலூர் மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கல்லூரி மாணவன் மின்னல் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமாபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ஜீவத் மழை பெய்ததால் மாட்டை பிடித்து கொட்டகையில் கட்டச் சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழந்து உயிரிழந்துள்ளார்.