பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்ட நபர்...தந்தை, மகனும் அடித்தே கொன்ற கொடூரம் - பரபரப்பை கிளப்பிய சம்பவம்

x

மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரம் மூன்றாவது வீதியைச் சேர்ந்தவர் ஹக்கீம். கூலித் தொழிலாளியான இவர், டாஸ்மாக் மதுக்கடையில் குடிகச் சென்ற போது, வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஆனந்தகுமார் என்பவரின் டேபிளில் இருந்து காலி பாட்டிலை எடுத்துள்ளார். பாட்டிலை திருப்பி கொடுத்தால் பத்து ரூபாய் கிடைக்கும் என ஹக்கீம் நினைத்து எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், ஆனந்தகுமார் தனது மகன் ஜீவானந்தத்தை வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து ஹக்கீமை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே, வலிப்பு ஏற்பட்டு கடந்த 14ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹக்கீம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வில் ஹக்கீமை பலமாக எட்டி உதைத்த‌தால் குடல் கிழிந்து இறந்த‌து தெரிய வந்த‌து. இதையடுத்து, ஆனந்தகுமார் அவரது மகன் ஜீவானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், அவர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்