Kovai | Flood | திடீர் வெள்ளப்பெருக்கு - கூழாங்கல் ஆற்றில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர்

திடீர் வெள்ளப்பெருக்கு - கூழாங்கல் ஆற்றில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர்

திடீர் வெள்ளப்பெருக்கு - கூழாங்கல் ஆற்றில் பாய்ந்து ஓடும் வெள்ள நீர் #kovai #flood #thanthitv கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கூழாங்கல் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறையின் சிரபுஞ்சி என அழைக்கப்படும் சின்னக்கல்லார், அக்காமலை மற்றும் கீரஸ் ஹில்ஸ் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆற்றில் குளிப்பது, ஆற்றைக் கடப்பது மற்றும் கால்நடைகளை மேய்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சுற்றுலாப் பயணிகளை ஆற்றில் இறங்க அனுமதிக்காமல் பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com