Coimbatore | மாணவியை அடித்ததை தட்டிக்கேட்ட தந்தை.. ஆத்திரத்தில் வீட்டை சூறையாடிய கும்பல்

Coimbatore | மாணவியை அடித்ததை தட்டிக்கேட்ட தந்தை.. ஆத்திரத்தில் வீட்டை சூறையாடிய கும்பல்

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே கல்லூரி மாணவியை தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து அவரது வீட்டை கும்பல் ஒன்று சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேச மறுத்த ஆத்திரத்தில் இளைஞர் ஒருவர் மாணவியை வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவியின் தந்தை அந்த இளைஞரிடம் தட்டிக்கேட்ட நிலையில், பின்னர் மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து டிவி, மின் விசிறி, பீரோ உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதுடன், பணம் மற்றும் நகைகளையும் எடுத்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com