கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறுமுகை அடர்ந்த வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கோவையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Published on

கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறுமுகை அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 28ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் படுத்து கிடந்தது. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக அந்த யானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com